சேலத்தில் 10-ந்தேதி தொழில்பழகுனர் சேர்க்கை முகாம்
- சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
- இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் தொழிற்நிறுவனங்க ளில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்ள் தங்க ளுக்கு உரிய தொழிற்பழ குனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகை யுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
ஏனவே இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்க ளது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழ குநர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.