உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து 1½ வயது குழந்தை சாவு

Published On 2023-02-20 09:25 GMT   |   Update On 2023-02-20 09:25 GMT
  • அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர்.
  • இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டதாக தெரிகிறது.

தாரமங்கலம்:

கொளத்தூர் அருகிலுள்ள பண்ணவாடி, ராமகிருஷ்ணா காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தாரமங்கலம் அருகிலுள்ள பெரியாம்பட்டி மாரியம்மன் கோவிலில் தங்கி அந்த பகுதியில் கைரேகை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து

விட்டதாக தெரிகிறது. மயக்கம் அடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News