உள்ளூர் செய்திகள்

வெட்டாற்றில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மெலட்டூர் வெட்டாற்றில், 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

Published On 2023-01-13 09:30 GMT   |   Update On 2023-01-13 09:30 GMT
  • ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடும் நோக்கில் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக பிரதான் மந்திரி மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சன் மற்றும் மெலட்டூர், அகரமாங்குடி பகுதி மீனவர்கள் கணேசன், ரமேஷ், கலைஅமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீன்வளத்துறை உதவி இயக்குனர் மா சிவக்குமார், மேற்பார்வையில் வெட்டாற்றில் மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்து மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News