விபத்துக்குள்ளன ஆமனி பஸ்சை படத்தில் காணலாம்.
குமாரபாளையம் அருகே, விபத்துஆம்னி பஸ் பள்ளத்தில் சரிந்தது
- சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.
- லாரிக்கு வழிவிட வேண்டி டிரைவர் பஸ்சை வேகமாக சாலை ஓரம் திருப்பினார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
குமாரபாளையம்:
சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. ஈரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் குமாரபாளையம் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, எதிரே வெப்படையை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டி ருந்தது.
இந்த லாரிக்கு வழிவிட வேண்டி டிரைவர் பஸ்சை வேகமாக சாலை ஓரம் திருப்பினார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இதில், பஸ்சில் பயணம் செய்த பியூலா, பிரான்சிஸ், முத்து, அலெக்ஸ்சாண்டர், பிரபாகரன், மதுபாலா ஆகிய 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.