உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பட்டதாரி பெண் மாயம்

Published On 2022-12-07 13:53 IST   |   Update On 2022-12-07 13:53:00 IST
மகளை பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

கடலூர்:

பண்ருட்டி திருநகரை சேர்ந்தவர் சின்னையன் மகள் பிரியா (வயது26). இவர் பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனியாக வீட்டில் இருந்த போது திடீரென்று காணவில்லை. இதனை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக அவரது தந்தை சின்னையன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில்இ ன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார் மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News