செய்திகள்
இந்தி நடிகர் ஓம்புரி மறைவு: விபத்து சார்ந்த மரணம் என போலீசார் வழக்குப்பதிவு
மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இந்தி நடிகர் ஓம்புரியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓம்புரி மரணம் விபத்து சார்ந்த மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தி நடிகர் ஓம்புரி (66) மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஓம்புரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் திரைப்பட உலகிலும், அவரது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது தலையின் இடது பக்கத்தில் காயம் உள்ளதாகவும், அந்த காயத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஓம்புரியின் அறையில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரது மரணத்தை விபத்து சார்ந்த மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓம்புரியின் உதவியாளர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.