செய்திகள்
நாம் தமிழர் கட்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியிலும் நாம்தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்தது

Published On 2021-05-03 08:50 GMT   |   Update On 2021-05-03 08:50 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கோமதி, ஈரோடு மேற்கில் சந்திரகுமார், மொடக்குறிச்சி தொகுதியில் கோ.பிரகாஷ், பெருந்துறை தொகுதியில் லோகநாதன், பவானி தொகுதியில் சத்யா, அந்தியூர் தொகுதியில் சரவணன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் சீதாலட்சுமி, பவானிசாகர் தொகுதியில் சங்கீதா ஆகியோர் போட்டியிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி 3-ம் இடம் பிடித்து உள்ளது. 6 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளும், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 13,353 வாக்குகளும், மொடக்குறிச்சி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 12,944 வாக்குகளும், பெருந்துறை தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,294 வாக்குகளும், பவானி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,471 வாக்குகளும், அந்தியூர் தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 8,230 வாக்குகளும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 11,719 வாக்குகளும், பவானிசாகர் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 8,517 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சிக்கு 87,157 வாக்குகள் கிடைத்தது. 


Tags:    

Similar News