செய்திகள்
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது- துரைமுருகன்
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வேலூர்:
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறார். காட்பாடி தொகுதியில் மட்டும் தி.மு.க. சார்பில் 10-வது முறையாக போட்டியிடுகிறார்.
அப்போது நிருபர்கள் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் துரைமுருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறார். காட்பாடி தொகுதியில் மட்டும் தி.மு.க. சார்பில் 10-வது முறையாக போட்டியிடுகிறார்.
அவர் இன்று காலை காட்பாடி காந்திநகரில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
அப்போது நிருபர்கள் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் துரைமுருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.