செய்திகள்
தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

திமுக கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றிபெற செய்யவேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-03-30 15:37 GMT   |   Update On 2021-03-30 15:37 GMT
நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து மொடக்குறிச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் தி.மு.க. 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.

அது பத்தாது நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்மை எதிர்த்து நிற்கும் கட்சிகளை டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
Tags:    

Similar News