ஐ.பி.எல்.(IPL)
வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ் ஆர் கே.அப்புவை கேசி வீரமணி அறிமுகப்படுத்தி பேசியபோது எடுத்த படம்.

வேலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்- அமைச்சர் கேசி வீரமணி பேச்சு

Published On 2021-03-20 16:57 IST   |   Update On 2021-03-20 16:57:00 IST
வேலூரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் ரூ. 1,000 கோடியில் வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று அமைச்சர் கேசி வீரமணி பேசியுள்ளார்.
வேலூர்:

வேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்புவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

வேலூர் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடையாளம் காட்டப்பட்டவர். பட்டப்படிப்பு படித்தவர். பண்பாளர். ஒரு இளைஞரை அ.தி.மு.க. இங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேலூரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் ரூ. 1,000 கோடியில் வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கூட்டணி பலமாக உள்ளது. வேட்பாளர் அப்புவை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜெ.மூர்த்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தசரதன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மொய்தீன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் இணைச்செயலாளர் முனியம்மாள், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, நாகு, சொக்கலிங்கம், ஜெய்சங்கர், சுந்தரம், பாண்டியன், அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், எம்.ஏ.ராஜா, ஆர். சுந்தரராஜி, பிரகாஷ் பாலச்சந்தர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ், வேலூர் ஒன்றிய செயலாளர் என்.கர்ணல், பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், வட்ட செயலாளர் சி.கே.ஜி.விஜயகுமார், பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், மகளிரணி மாநில தலைவி வரலட்சுமி, மாநகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஜெயப்பிரகாசம் நன்றி கூறினார்.

Similar News