செய்திகள்
துரைமுருகன்

அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்- துரைமுருகன் பேட்டி

Published On 2021-03-16 03:56 GMT   |   Update On 2021-03-16 03:56 GMT
திமுக தேர்தலில் வெற்றி சிறகடித்து வெளியே வருவோம் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடி:

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வில்லன். நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி சிறகடித்து வெளியே வருவோம். தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது இதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடப்பது தான். இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

10 முறை ஒரே தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன் என்றால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றி செய்துள்ளேன். அதனால் தான், மக்கள் என்னை தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் 10 முறை என 15-வது முறையும் வெற்றி பெறச் செய்வார்கள்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
Tags:    

Similar News