செய்திகள்
மேலூரில் இன்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. பேசினார்.

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கலாம்- இல.கணேசன் எம்பி

Published On 2018-07-24 08:21 GMT   |   Update On 2018-07-24 08:21 GMT
பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம் என்று மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. கூறினார். #OneNationOneElection
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூரில் இன்று பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இல. கணேசன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார்.

காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் இன்று யாரேனும் வயல்வெளியில் இறங்கி விவசாய பணிகளை செய்தார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி.

பொய் வதந்தி மூலம் குழந்தை திருட வந்ததாக, சில அப்பாவி மக்கள் தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது இந்த தேசத்தின் மீது குற்றச்சாட்டை பரப்ப வேண்டும் என்று சிலர் செய்யும் பிரசாரம் ஆகும்.


ஸ்டெர்லைட் ஆலை மூலம் அந்தப்பகுதி மாசடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயல்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும். இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

கவர்னர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. கவர்னர் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan  #OneNationOneElection
Tags:    

Similar News