செய்திகள்

அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

Published On 2017-11-13 11:16 IST   |   Update On 2017-11-13 11:17:00 IST
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் இல்லாமல் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சோழிங்கநல்லூர்:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலா, தினகரன் என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டும் சோதனையிடாமல் அவர்களுக்கு உதவியாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், உடன் இருக்கும் அமைச்சர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.டி.யை டி.டி. வி.தினகரன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


குஜராத் தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நடந்திருக்கிறது. கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News