செய்திகள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவையில்லை என அறிவிக்க தயாரா?: எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி
சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூற தயாரா? என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி புதிய அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. அரசியல் அநாகரீகம். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டு 26.2.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை விழா மேடையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசி விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதால் தி.மு.க. முடங்கி போய் விடாது. கைது செய்ய செய்யத்தான் தி.மு.க. கம்பீரமாக எழுந்து நிற்கும்.
கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்கை காவல்துறை போட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு. க. சார்பில் வழக்கு தொடரப்படும்.
ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அவர்களே கவிழ்ந்து விடுவார்கள். அதன்பிறகு தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது இன்று கைது செய்த காவல்துறையினர் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்று நான் கூறியதற்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் ஒரு குட்டிக்கதை கூறினார். அதில் நாட்டாமை என்று யாரை கூறுகிறார் என்று தமிழிசை பதில் அளிக்க வேண்டும்.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு மைனாரிட்டி ஆட்சியாக தி.மு.க. நடந்தது. இதனால் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அன்றைக்கு மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஒரே முதல்வராக 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் இன்று ஒரே ஆண்டில் 3 முதல்வர்கள். எனவே தி.மு.க.வை பற்றி பேச அ.தி.மு.க.விற்கு எந்த அருகதையும் கிடையாது.
அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தினகரனுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். ஆனால் தற்போது தினகரனை எம்.எல்.ஏ.க்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் சென்று பார்த்து வருகின்றனர். இதனால் தினகரனை சந்தித்த எம்.எல். ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க ஜெயக்குமார் தயாரா?
மத்திய அரசின் பினாமியாகத்தான் இந்த அரசு நடந்து வருகிறது. மேலும் செயல்படாத அரசாகத்தான் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் என்பது முதல் படிதான். ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூற தயாரா? அப்படி அவர் கூறினால் நான் இந்த ஆட்சியை நிலையான ஆட்சி என்று ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துக்கருப்பன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி புதிய அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. அரசியல் அநாகரீகம். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டு 26.2.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை விழா மேடையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசி விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதால் தி.மு.க. முடங்கி போய் விடாது. கைது செய்ய செய்யத்தான் தி.மு.க. கம்பீரமாக எழுந்து நிற்கும்.
கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்கை காவல்துறை போட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு. க. சார்பில் வழக்கு தொடரப்படும்.
ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அவர்களே கவிழ்ந்து விடுவார்கள். அதன்பிறகு தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது இன்று கைது செய்த காவல்துறையினர் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்று நான் கூறியதற்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் ஒரு குட்டிக்கதை கூறினார். அதில் நாட்டாமை என்று யாரை கூறுகிறார் என்று தமிழிசை பதில் அளிக்க வேண்டும்.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு மைனாரிட்டி ஆட்சியாக தி.மு.க. நடந்தது. இதனால் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அன்றைக்கு மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஒரே முதல்வராக 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் இன்று ஒரே ஆண்டில் 3 முதல்வர்கள். எனவே தி.மு.க.வை பற்றி பேச அ.தி.மு.க.விற்கு எந்த அருகதையும் கிடையாது.
அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தினகரனுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். ஆனால் தற்போது தினகரனை எம்.எல்.ஏ.க்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் சென்று பார்த்து வருகின்றனர். இதனால் தினகரனை சந்தித்த எம்.எல். ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க ஜெயக்குமார் தயாரா?
மத்திய அரசின் பினாமியாகத்தான் இந்த அரசு நடந்து வருகிறது. மேலும் செயல்படாத அரசாகத்தான் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் என்பது முதல் படிதான். ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூற தயாரா? அப்படி அவர் கூறினால் நான் இந்த ஆட்சியை நிலையான ஆட்சி என்று ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துக்கருப்பன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.