லைஃப்ஸ்டைல்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 12-ந்தேதி வரலட்சுமி விரதம்

Published On 2016-07-25 05:12 GMT   |   Update On 2016-07-25 05:33 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்டு 12-ந்தேதி வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்டு 12-ந்தேதி வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் இருக்க 200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான இ-தர்ஷன் டிக்கெட் விற்பனை வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது.

வரலட்சுமி விரதத்தில் பங்கேற்க 1 தம்பதிக்கு ரூ.500 டிக்கெட் ஆகும். டிக்கெட் வாங்கும் தம்பதிகள் பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்து விரதம் மேற்கொள்ளலாம்.

அன்று மாலையில் பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் வலம் வந்து காட்சி தருவாள்.

வரலட்சுமி விரதத்தையொட்டி பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்டு 12-ந்தேதி அபிஷேகம், ஆனந்தாதரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவை ரத்து செய்யப்படுகின்றன.

Similar News