அழகுக் குறிப்புகள்

நரை முடி, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

Published On 2023-03-15 07:11 GMT   |   Update On 2023-03-15 07:11 GMT
  • கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும்.
  • கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும்.

கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்துவர முடி வளரும். இளநரை சரியாகும்.

மூன்று நெல்லிக்காயுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.

கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படும்.

கறிவேப்பிலை இலைகளை அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர, முடி செழுமையாக வளரும்.

கறிவேப்பிலையைக் காய்ச்சி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தொடர்ந்து தேய்த்து வர, முடி நன்கு வளரும்.

கறிவேப்பிலைச் செடியில் இருந்து இலைகளுடன் கூடிய குச்சியை வெட்டிக் காயவைக்கவும். இலைகள் உதிரும்வரை காத்திருக்க வேண்டும். இலைகள் உதிர்ந்ததும் அவற்றை எடுத்து, அத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.

கறிவேப்பிலையுடன் 2 மிளகு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.

Tags:    

Similar News