லைஃப்ஸ்டைல்
சருமத்தில் எண்ணெய் வழிய இவை தான் காரணம்

சருமத்தில் எண்ணெய் வழிய இவை தான் காரணம்

Published On 2020-12-17 07:56 GMT   |   Update On 2020-12-17 07:56 GMT
சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒரு சில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.
பெண்களில் சிலருடைய சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும். சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒருசில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.

* நிறைய பேர் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ச்சுரைசர்களை பயன்படுத்துவார்கள். அதனை எண்ணெய் வழியும் சமயத்தில் மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்தான் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.

*முகத்திற்கு அதிகம் மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முகத்தில் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை அதிகம் உபயோகிப்பதும் எண்ணெய் சுரப்பதற்கு காரணமாக இருக்கும்.

* பெண்களில் பலர் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். அப்படி கழுவுவதும் எண்ணெய் சுரப்புக்கு வழிவகுத்துவிடும்.

*மன அழுத்தமும் எண்ணெய் பசைத்தன்மைக்கு காரணமாகும். ஏனெனில் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஹார்மோன்கள் சுரப்பு சீரற்ற தன்மையில் இருக்கும். அதன் காரணமாகவும் எண்ணெய் சுரக்க தொடங்கும்.

* போதுமான அளவு தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதும் சருமத்தில் எண்ணெய் சுரக்க காரணமாகி விடும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.

Tags:    

Similar News