லைஃப்ஸ்டைல்
தேங்காய் பால் அரிசி பாயாசம்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: தேங்காய் பால் அரிசி பாயாசம்

Published On 2021-11-19 09:12 GMT   |   Update On 2021-11-19 09:12 GMT
திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - ஒன்று (பெரியது)
பச்சரிசி - அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்

செய்முறை:
 
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.

கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் தயார்.

Tags:    

Similar News