லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காளான் கபாபை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய காளான் - அரை கப்
கடலைப் பருப்பு - அரை கப்
ரொட்டித்தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
ஸ்வீட் கார்ன் - கால் கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
கசகசா, சீரகம் - தேவைக்கு
ஏலக்காய், கிராம்பு - 4
பெ.வெங்காயம் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லி தட்டில் ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும்.
கடலை பருப்பையும் குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியை மிதமான சூட்டில் வைத்து சீரகம், கசகசாவை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அதுபோல் கடலை பருப்பு, காளான், சுவீட் கார்ன் போன்றவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் காளானை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த மசாலா கலவை, சோளமாவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இந்த கலவைகளை உருண்டைகளாக உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான காளான் கபாப் ரெடி.
நறுக்கிய காளான் - அரை கப்
கடலைப் பருப்பு - அரை கப்
ரொட்டித்தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
ஸ்வீட் கார்ன் - கால் கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
கசகசா, சீரகம் - தேவைக்கு
ஏலக்காய், கிராம்பு - 4
பெ.வெங்காயம் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லி தட்டில் ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும்.
கடலை பருப்பையும் குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியை மிதமான சூட்டில் வைத்து சீரகம், கசகசாவை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அதுபோல் கடலை பருப்பு, காளான், சுவீட் கார்ன் போன்றவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் காளானை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த மசாலா கலவை, சோளமாவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இந்த கலவைகளை உருண்டைகளாக உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான காளான் கபாப் ரெடி.
அதன் மீது வெங்காயம், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.