பெண்கள் உலகம்

சாதத்திற்கு அருமையான இறால் மசாலா தொக்கு

Published On 2018-09-20 15:17 IST   |   Update On 2018-09-20 15:17:00 IST
இறாலை வறுவல், குழம்பு, கிரேவி, பிரியாணி என பலவகைகளில் சமையல் செய்து உண்ணுகிறார்கள். அதில் இறால் மசாலா தொக்கு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.

தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

ருசியான இறால் மசாலா தொக்கு ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News