லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை

Published On 2018-08-09 05:57 GMT   |   Update On 2018-08-09 05:57 GMT
ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்
புளி, உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - அரை ஸ்பூன்.



செய்முறை :

சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News