லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான சோலே பன்னீர் கிரேவி

Published On 2018-06-26 09:35 GMT   |   Update On 2018-06-26 09:35 GMT
நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சோலே பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சென்னா - ஒரு கப்
பன்னீர் - 3/4 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
பிரியாணி இலை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி



செய்முறை :

சென்னாவை வேக வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.

அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அளவு ஊற்றி மசாலா வாசனை போனும் வரை கொதிக்க விடவும்.

இத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

சுவையான சோலே பன்னீர் கிரேவி தயார்

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News