லைஃப்ஸ்டைல்

அருமையான ஸ்நாக்ஸ்: தட்டை செய்வது எப்படி

Published On 2018-06-02 06:08 GMT   |   Update On 2018-06-02 06:08 GMT
விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுக்கலாம். இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



செய்முறை :

முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஒரு துணியில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். ( நன்றாக எண்ணெய் அடங்கிய பின்னர் தான் எடுக்க வேண்டும்)

இதே போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான தட்டை தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News