லைஃப்ஸ்டைல்

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

Published On 2016-12-31 09:46 GMT   |   Update On 2016-12-31 09:46 GMT
நாளை புத்தாண்டு அன்று செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை சிறு துண்களாக வெட்டி நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 8 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள (சோம்பு, மிளகு) பொடியை சேர்த்து கிளறி கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News