லைஃப்ஸ்டைல்

சம்பா ரவை பாயாசம்

Published On 2016-12-29 05:29 GMT   |   Update On 2016-12-29 05:29 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான சம்பா ரவை பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பால் - 500 மி.லி.
சம்பா ரவை - 200 கி
நெய் - 2 ஸ்பூன்கள்
சர்க்கரை - 1 கப்
முந்திரிப்பருப்பு - 8 முதல் 10
கிஸ்மிஸ் - 8 முதல் 10
ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்

செய்முறை:

* பாலை தண்ணீர் சேர்க்காமல், பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

* ஒரு சட்டியில், நெய்யையும் முந்திரிப்பருப்பையும் சேர்த்து கலந்து, அது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின் அதனுடன் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து, அது பஞ்சு போன்று வரும் வரைக்கும் மீண்டும் வதக்கவும்.

* அதே சட்டியில், சம்பா ரவையை சேர்த்து, சிறு தீயில் வைத்து நன்றாக கிண்டவும்.

* நன்றாக கொதிக்க வைத்த கெட்டியான பாலை சம்பா ரவையுடன் சேர்க்கவும். கட்டி ஏற்படாமல் நன்றாக கிளறவும்.

* பின் அதனுடன் ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்க்கவும்.

சுவையான  சம்பா ரவை பாயாசம் தயார்.

 சம்பா ரவை பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.


- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News