லைஃப்ஸ்டைல்

தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி செய்வது எப்படி

Published On 2016-10-18 03:24 GMT   |   Update On 2016-10-18 03:24 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஃப்ரூட்ஸ் கேசரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - ஒரு கப்,
சர்க்கரை - ஒரு கப்,
நெய் - அரை கப்,
கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப்,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு.

செய்முறை:

* கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

* பின்னர் அதே நெய்யில் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* நன்றாக கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

* சர்க்கரை நன்றாக கரைந்த பின் நெய், பழ வகைகள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.  

* சுவையான தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News