லைஃப்ஸ்டைல்

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

Published On 2016-09-14 08:49 GMT   |   Update On 2016-09-14 08:49 GMT
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

அரிசி - 1/2 டம்ளர் 
தேங்காய்ப்பால் - 4 டம்ளர் 
வெல்லம் - 2 டம்ளர் 
ஏலக்காய் தூள் - சுவைக்கு 
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை: 

* வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும். 

* அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். 

* வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். 

* ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

* அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும். 

* அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.

* நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும். 

* தித்திப்பான அடை பிரதமன் தயார்

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News