லைஃப்ஸ்டைல்

சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி

Published On 2016-07-28 08:42 GMT   |   Update On 2016-07-29 02:18 GMT
மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்
சோம்பு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
காய்ந்த மிளகாய் - 20 கிராம்
தேங்காய் - 50 கிராம்
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
சின்னவெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - 20 கிராம்
கொத்தமல்லித்தழை - 20 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புழுங்கலரிசியை தனியாகவும், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து இறக்கவும்.

* புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கடைசியாக மட்டன் கொத்துகறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்னவெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான மட்டன் அடை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News