காய்கறிகள் சேர்த்து பொங்கல் செய்யலாம் வாங்க...
- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- இந்த பொங்கல் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட்- 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 1 சிறியது
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். (காய்கறிகள் அனைத்து 1 கப் அளவிற்கு இருக்க வேண்டும்)
அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிக்கலவையைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.
இப்போது கமகம காய்கறிப் பொங்கல் தயார்.