சமையல்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க...

Published On 2022-12-24 09:19 GMT   |   Update On 2022-12-24 09:19 GMT
  • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
  • சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

சீரக சம்பா அரிசி - 4 கப்

மட்டன் - அரை கிலோ

இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 4

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 4

மிளகாய் தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி

தயிர் - அரை கப்

லெமன் - 1

புதினா - ஒரு கட்டு

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

நெய் - அரை கப்

எண்ணெய் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கிராம்பு - 3

பட்டை - 3 சிறிய துண்டு

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இலை - ஒன்று

சோம்பு - ஒரு ஸ்பூன்

செய்முறை :

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

Tags:    

Similar News