சமையல்
- வீட்டில் வடித்த சாதம் வைத்தும் சூப் தயாரிக்கலாம்.
- இந்த சூப்பை செய்வதும் மிகவும் எளிது.
தேவையான பொருட்கள் :
சாதம் வடித்த தண்ணீர், காய்கறி வேக வைத்த தண்ணீர் - தலா ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
சாதம் வடித்த தண்ணீர் கிடைக்கா விட்டால் சாதத்துடன் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.