சமையல்

குழந்தைகளுக்கு சத்தான கீரை பிரியாணி

Published On 2023-01-09 09:22 GMT   |   Update On 2023-01-09 09:22 GMT
  • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
  • கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள் : 

பாசுமதி அரிசி - ஒரு கப்,

வெந்தயக்கீரை- ஒரு கப்,

வெங்காயம் - 2,

தக்காளி - 1,

உருளைக்கிழங்கு - 2,

பச்சை மிளகாய் - 3,

பிரிஞ்சி இலை - 1,

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.

இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News