சமையல்

சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

Published On 2023-04-04 09:25 GMT   |   Update On 2023-04-04 09:25 GMT
  • முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
  • சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

வரமிளகாய் - 18

வெங்காயம் - 2

பட்டை - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.

வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

Tags:    

Similar News