சமையல்

குழந்தைகள் விரும்பும் தேங்காய் அல்வா

Published On 2022-08-27 05:56 GMT   |   Update On 2022-08-27 05:56 GMT
  • அல்வா என்றதுமே நமக்கு நினைவில் வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான்.
  • இன்று தேங்காய் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 2 கப்

கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - 2 1/2 கப்

சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்

முந்திரி - தேவையான அளவு

நெய் - 5 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

* பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இடைஇடையே நெய் சேர்த்துகொள்ளலாம்.

* கடைசியாக அல்வா போன்று வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.

* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

* மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது.

Tags:    

Similar News