சமையல்

வீட்டிலேயே செய்யலாம் ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி

Published On 2023-03-01 09:14 GMT   |   Update On 2023-03-01 09:14 GMT
  • மாட்டிறைச்சியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
  • மாட்டிறைச்சியை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்: 

பாசுமதி அரிசி - 1 கிலோ, 

பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ, 

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, 

வெங்காயம் - 500 கிராம், 

பழுத்த தக்காளி - 500 கிராம், 

பச்சை மிளகாய் - 5 

கொத்தமல்லி, புதினா - தலா 1 கொத்து, 

எண்ணெய் - 200 மில்லி, 

நெய் - 50 மில்லி, 

எலுமிச்சை -அரை பழம் 

பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, 

பிரியாணி இலை - 2, 

உப்பு தூள் - தேவையான அளவு 

செய்முறை: 

அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.

பீப் (மாட்டிறைச்சி)  கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைசேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

வெங்காயம் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பிறகு புதினா, தயிர் சேர்க்கவேண்டும். 

அடுத்து தக்காளி, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். 

அடுத்து உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து பீப் (மாட்டிறைச்சி) சேர்த்து வேக விட வேண்டும்.

பீப் (மாட்டிறைச்சி) வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். 

பீப் (மாட்டிறைச்சி)  அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். 

ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும். 

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். 

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி ரெடி.

Tags:    

Similar News