லைஃப்ஸ்டைல்
திணை காரப் பணியாரம்

சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இந்த டிபன் சாப்பிடுங்க...

Published On 2021-03-04 05:22 GMT   |   Update On 2021-03-04 05:22 GMT
காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்

திணை அரிசி - 1 கப்
உளுந்து - அரை கப்,
வெந்தயம் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
ப.மிளகாய்  - 4,
எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு,
சீரகம் - சிறிதளவு.

செய்முறை

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

திணை அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும்.

இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

கடலைத் துவையல், புதினா துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
Tags:    

Similar News