லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் காய்கறி உப்புமா

Published On 2018-09-10 04:57 GMT   |   Update On 2018-09-10 04:57 GMT
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டாணி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்



செய்முறை :

ஒட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்

வெங்காயம், கேரட், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வறுத்த ஓட்சில் உப்பு கலந்த நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று காய்கறிகள், பட்டாணியை சேர்த்து காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் உதிராக பிசைந்த ஓட்ஸை போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

சத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி.

விருப்பப்பட்டால் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News