லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

Published On 2018-07-11 04:21 GMT   |   Update On 2018-07-11 04:21 GMT
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது சத்துமாவு பாசிப்பருப்பு அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - அரை கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பூண்டு - 2,
கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News