லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சூப்

Published On 2018-05-18 03:57 GMT   |   Update On 2018-05-18 03:57 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - பாதி
காய்ச்சிய பால் - 1/2 கப்
எண்ணெய் - 1 தேக்க‌ர‌ண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்

தாளிக்க :

சோம்பு - கால் தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்க‌ர‌ண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வெந்ததும் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனவுடன் குக்கரை திறந்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News