லைஃப்ஸ்டைல்

சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

Published On 2016-07-23 06:35 GMT   |   Update On 2016-07-23 06:38 GMT
பருப்புக்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பருப்பைக் கொண்டு சாம்பார் செய்வதற்கு பதிலாக தால் செய்து சாப்பிடுங்கள். நீங்கள் அந்த தால் ரெசிபிக்கே அடிமையாகிவிடுவீர்கள்.
தேவையான பொருட்கள் :

மைசூர் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 7 பல்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைக்கவும்.

* மைசூர் பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் பருப்பை கடைந்து வைக்கவும்

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து மசித்த பருப்பை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பருப்பு தால் ரெடி!

* இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு இந்த பருப்பு தால் சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News