பெண்கள் உலகம்

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

Published On 2016-05-13 06:54 IST   |   Update On 2016-05-13 06:54:00 IST
சுவையான சத்தான ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராகி சேமியா  - 200 கிராம்
நீர் - 1.5 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய்  - 2
கேரட் - 1
பீன்ஸ்   - 6
குடை மிளகாய்   - ½
உப்பு  - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை -  சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை  - ஒரு கொத்து

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

* பின்பு பச்சை மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் உப்பு சேர்த்து காய்கறிகளின் பச்சை வாசம் போகும் நன்கு கிளறவும்.

* காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ராகி சேமியா சேர்த்து சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும்.

* மிதமான தீயில் வேக வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும்

* வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

* சுவையான ராகி சேமியா உப்புமா ரெடி.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News