பெண்கள் உலகம்

கோடையில் தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்

Published On 2016-04-26 09:41 IST   |   Update On 2016-04-26 09:41:00 IST
கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 3
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி.

குறிப்பு: இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Similar News