பொது மருத்துவம்

நீங்கள் நிம்மதியாக தூங்க காலை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா?

Published On 2025-10-11 11:17 IST   |   Update On 2025-10-11 11:17:00 IST
  • இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.
  • பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

நாள் முழுவதும் அலுவலக வேலைகள் மற்றும் வீட்டு வேலைகள் நம்மை சோர்வடையச் செய்கின்றன. இது நமது அன்றாட வேலைகளில் தடைகளை உருவாக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவைத் தவிர, நல்ல இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

ஒரு சிலருக்கு பல மணி நேரம் நடக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும், காலணிகளை பயன்படுத்தினாலும் சிலர் அதனை பயன்படுத்துவதில்லை. இதனால், பாதத்தில் தரையில் உள்ள அழுக்குகள் சேர்கிறது. எனவே, எவ்வளவு வேலைகளாக இருந்தாலும் கை, கால், முகத்தை கழுவுவதை வழக்கமாக வைத்திருப்பவது அவசியமாகிறது. ஏனெனில் சுகாதாரம் மிகவும் அவசியமான ஒன்று.

ஆனால் இது மட்டுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானதல்ல. இதற்கு பிறகும் நீங்கள் ஒரு விஷயத்தை தவறவிடுவதன் மூலம் உங்கள் படுக்கையை கிருமிகள் நிறைந்ததாக மாற்றலாம்.

பொதுவாக நாம் கை மற்றும் முகத்தில் கவனம் செலுத்துகிறோம், ஆனால் பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். நமது பாதங்கள் முழு உடலின் எடையையும் சுமக்கின்றன.

உடல் வெப்பநிலையை பராமரிக்க கால்களைக் கழுவுவதில் ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பாதங்கள் நெருப்பின் அம்சத்துடன் தொடர்புடையவை. காலணிகளை அணிவது, நாள் முழுவதும் அந்த மூடப்பட்ட பகுதியில் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். காலணிகளைக் கழற்றியவுடன் உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா? இதற்குக் காரணம், உடனடியாக வெப்பம் வெளியேறுவதே ஆகும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாதங்களைக் கழுவுவது குளிர்ச்சியாக இருக்கவும், நன்றாக தூங்கவும் உதவும்.

Tags:    

Similar News