பொது மருத்துவம்

மழை காலத்தில் ஏற்படும் சளி, இருமல் குணமாகனுமா? இதை செய்து பாருங்கள்!

Published On 2023-10-11 08:47 GMT   |   Update On 2023-10-11 08:47 GMT
  • பருவநிலை மாறுவதால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.

பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்தல், சரியான தூக்கம் ஆகியன உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகின்றன. சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த முடியும். மூலிகைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராட உதவுகிறது.

மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும் இந்த சீசனுக்கு சளி, இருமல் வந்து அவதிப்படுகிறீர்களா? இதை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை-1

ஏலக்காய்-1

மிளகு-5

கிராம்பு-1

தேன்- ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு இளம் வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதி மட்டும், வால் பகுதியை கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதன் நடுப்பகுதியில் ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பீடா மாதிரி மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

முதலில் சாப்பிடும் போது இனிப்பாக இருக்கும். சாப்பிட்டு முடிக்கும் போது தான் அதன் காட்டம் தெரியும். ஒரு நாளைக்கு ஒருதடவை என்று மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட நிச்சயம் சளி, இருமல் குணமாகும். வறட்டு இருமலாக இருந்தாலும், சளி இருமலாக இருந்தாலும் குணமாகும்.

Tags:    

Similar News