பொது மருத்துவம்

கேரட் அதிகளவில் உண்டால் பக்கவிளைவுகள் வருமா?

Published On 2022-06-25 08:33 GMT   |   Update On 2022-06-25 08:33 GMT
  • கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.
  • கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்களே அதுபோன்று நல்ல சத்துக்கள் நிரம்பிய கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.

கேரட், அதிகமான சத்துக்கள் அடங்கியது. உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. அதுவே தேவையான அளவை விட அதிகமாக உண்ணும்போது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது ஒரு நாளைக்கு போதுமான அளவு

கேரட்சாறு- 60 மி.லி (அல்லது)

கேரட் பொரியல் 1கப் (அல்லது)

கேரட் சாலட் 1கப் எடுத்து கொள்வது நல்லது.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் கேரட் அளவுடன் சாப்பிடுவது நல்லது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கேரட் உண்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருந்தால் கேரட் உண்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

Tags:    

Similar News