பொது மருத்துவம்

இந்த 5 பொருள் போதும் : வயிறு உப்புசத்திற்கு உடனடி தீர்வு

Published On 2025-07-08 15:13 IST   |   Update On 2025-07-08 15:13:00 IST
  • சீரகமானது செரிமானத்தை தூண்டுகிறது.
  • அஜ்வைன் மற்றும் பெருஞ்சீரகம் வாயுத்தொல்லையை நீக்க உதவுகிறது.

காலையில் எழுந்திருக்கும் போதே வயிறு உப்புசமாக இருப்பதாக உணர்கிறீர்களா? இனி கவலையே வேண்டாம். உங்கள் வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தாலே போதும் வயிறு உப்புசம், வயிறு வீக்கம் குணமாகும். உடல் எடை இழப்பிற்கு கூட பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சீரகம் - 1 கப்

பெருஞ்சீரகம் - 1 கப்

வெந்தயம் - 1 கப்

கேரம் விதைகள் ( அஜ்வைன்) - 1 கப்

கடுகு - 1 கப்

செய்முறை:

கனமான பாத்திரத்தில் சீரகம், பெருஞ்சீரகம்,வெந்தயம், கேரம் விதைகள் மற்றும் கடுகு முதலானவற்றை சேர்த்து, நறுமனம் வரும்வரை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை நன்கு ஆற வைத்து, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்துவைத்த பொடியை ஒரு கண்ணாடி ஜாடியில் காற்று புகா வண்ணம் மூடி வைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்து வைத்த இந்த பொடியை தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்துவர வயிறு உப்புசம், வயிறு வீக்கம் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடை இழப்பிற்கும் வழிவகுக்கும்.

சீரகமானது செரிமானத்தை தூண்டுகிறது. அஜ்வைன் மற்றும் பெருஞ்சீரகம் வாயுத்தொல்லையை நீக்க உதவுகிறது. வெந்தயம் பசியை கட்டுப்படுத்துவதாகவும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு விதைகள் கலோரிகளை எரிக்கவும் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கவும் வளர்சிதை மாற்றத்திற்கான செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் இந்த 5 பொருட்களும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் டையூரிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் தாராளமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மேக்ரோபயாடிக் சுகாதார பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷில்பா அரோரா கூறுகிறார்.

Tags:    

Similar News