பொது மருத்துவம்

நோய்களை போக்கும் மூலிகை சாறு

Published On 2024-02-15 06:33 GMT   |   Update On 2024-02-15 06:33 GMT
  • எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு.
  • ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

உடலுக்கு சிறிது உபாதை வந்தாலும், மருத்துவர்களை நாடி செல்லத் தொடங்குகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு நலம் பெற்றாலும், அம்மருந்துகளால், என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்று, நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதற்கு மாற்றாக, வீட்டு வளாகத்திலேயே, மூலிகை செடிகளை வளர்த்தால், சிறு, சிறு உபாதைகளுக்கு, சிறந்த மருத்துவமாக பயன்படும்.

அருகம்புல் சாறு:

எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.

அருகம்புல் பச்சையம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து எடை குறையும்.

தூதுவளை இலைச்சாறு:

மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.

துளசி இலைச்சாறு:

காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு:

பார்வை பலம் பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொன்னாங்கண்ணி இலைச்சாறு:

உடலுக்கு வலு ஊட்டுவதோடு, பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும். கண் பார்வை அதிகரித்து, வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

வல்லாரை இலைச்சாறு:

நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.

முசுமுசுக்கை இலைச்சாறு:

தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

வில்வ இலைச்சாறு:

காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும்.

புதினா இலைச்சாறு:

வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு:

தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். பசியை, நன்கு தூண்டும். நீரழிவு நோய், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

வாழைத்தண்டுச் சாறு:

சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், ரத்த அழுத்தம் குறையும். அமிலத்தை குறைத்து, உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்பு, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும்.

சாம்பல் பூசணிக்காய் சாறு:

பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.

கேரட் சாறு:

கண்பார்வை ஒளி பெறும், கண்நோய், பல நோய்கள் குறையும். அமிலத்தைக் குறைக்கும்.

கொத்தமல்லிசாறு:

பசியை நன்கு தூண்டும். பித்தம் மற்றும் வாத நோய் குறையும். மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

Tags:    

Similar News