லைஃப்ஸ்டைல்

தித்திப்பான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி

Published On 2016-07-06 02:20 GMT   |   Update On 2016-07-06 02:20 GMT
இனிப்பான சுவையான பைனாப்பிள் கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளை ரவை - 1  கப்
பைனாப்பிள் - 1 சிறியது
நெய் - அரை கப்
சர்க்கரை -  2  கப்
தண்ணீர் - 3 1/2 கப்
ஏலக்காய்தூள் - சிறிது
பைனாப்பிள் எசன்ஸ் - சிறிது
முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா - தேவையக்கு

செய்முறை :

* பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து தனியே வைக்கவும்.

* அதே கடாயில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

* பின் கடாயில் தண்ணீர் (3 1/2 கப்) ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது  கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும்.

* வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* அடுத்து அதில் மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

* இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* தித்திப்பான பைனாப்பிள் கேசரி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News