லைஃப்ஸ்டைல்

இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

Published On 2016-05-06 08:57 GMT   |   Update On 2016-05-06 08:58 GMT
கேரட் பாதாம் கீர் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.
தேவையான பொருள்கள் :

பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கேரட் - 3
பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - 2 இதழ்
பாதாம், முந்திரி - சிறிதளவு

செய்முறை :

* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாலைக் காய்ச்சி வைக்கவும்.

* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.

* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

* சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.

* பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

* கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News