கால்பந்து

இங்கிலீஷ் பிரீமியர் லீக்: வரும் 31-ம் தேதி அர்செனல்-மான்செஸ்டர் சிட்டி மோதல்

Published On 2024-03-29 11:37 GMT   |   Update On 2024-03-29 11:37 GMT
  • இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும்.
  • லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும்.

ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்ல் ஒளிபரப்புகிறது.

ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இத தவற விட்டுடாதீங்க என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News